தூய ஆவியானவர் பாடல்

தூய ஆவியே துணையாக வருவீர்

இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர்

 1. மனதின் தீமைகளை மன்னிக்க வருவீர்

மனதின் கீறல்களை ஆற்றிட வருவீர்

 2. மனதின் பாரங்களைப் போக்கிட வருவீர்

மனதின் காயங்களை ஆற்றிட வருவீர்

 3. தாழ்வு மனம் நீங்கித் தேற்றிட வருவீர்

தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர்                                                                                                                                                         

இயேசுவின் திரு இதயத்துக்கு பிற பக்தி முயற்சிகள்

இயேசுவின் திரு இருதயச் செபமாலை:

கிறிஸ்துவின் திரு ஆத்துமமே,                  - என்னைத் தூய்மையாக்கும்
 
கிறிஸ்துவின் திரு உடலே,                         - என்னை மீட்டருளும்.
 
கிறிஸ்துவின் திரு இரத்தமே,                     - என்னை நிரப்பியருளும்.
 
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே,      - என்னை கழுவியருளும்.
 
கிறிஸ்துவின் திருப்பாடுகளே,                  - என்னைத் திடப்படுத்தும்

நல்ல இயேசுவே,                                    - எனக்கு செவி சாய்த்தருளும்.
 
உம் திருக்காயங்களுக்குள்,                      - என்னை மறைத்தருளும்.
 
உம்மை விட்டு,                                            - என்னைப் பிரியவிடாதேயும்.
 
பகைவரிடமிருந்து,                                    - என்னைக் காத்தருளும்.
 
என் மரண நேரத்தில்,                                 - என்னை அழைத்துஉம் புனிதரோடு 

  எக்காலமும்

உம்மைப் புகழ,                                          - எனக்குக் கற்பித்தருளும் ஆமென்.

 விசுவாச அறிக்கை :

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வல பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன்ஆமென்.

இயேசு கற்பித்த செபம் :

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,  உமது பெயர் தூயது என போற்றப்பெறுக!  உமது ஆட்சி வருக!  உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!  / எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும்.  எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.  எங்களை  சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.  ஆமென்

 மங்கள வார்த்தை ஜெபம் … (3 times)

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே.  பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே.  உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.  /  தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்.  ஆமென்      

 திரித்துவப் புகழ்: 

தந்தைக்கும், மகனுக்கும்,  தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக. தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.  ஆமென்

 பத்து மணிக் கருத்துக்கள்:

1. பிற சமயத்தினராலும்பிரிவினைச் சகோதரர் அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.

 2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.

 3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.

 4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.

 5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்பு செய்யுமாறு அமல அன்னைபுனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.

பெரிய மணி:

இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! - என் இதயத்தை உம் இதயம் போல் ஆக்கியருளும்!

சிறிய மணி:

இயேசுவின் மதுரமான திருஇருதயமே (10) என் சிநேகமாயிரும்.!

பத்து மணி முடிவில்:

 மரியாவின் மாசற்ற இருதயமே - என் இரட்சணியமாயிரும்

ஐம்பது மணி முடிவில்:

முதல்வர்:   இயேசுவின் திரு இதயமே
 
எல்லாரும்எங்கள்மேல் இரக்கமாயிரும்.

முதல்வர்:   ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற

திரு இருதயமே

எல்லாரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

முதல்வர்:   இயேசுவின் திரு இருதயம்
 
எல்லாரும்எங்கும் போற்றப்படுவதாக.

முதல்வர்:   திரு இதயத்தின் அன்பரான புனித சூசையப்பரே
 
எல்லாரும்எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் திருஇருதயமேஉமது அரசு வருகஎங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும்எனது செபம்தபம்அனுதின அலுவல்இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும், உம்மை மகிமை படுத்தவும், எங்களுக்கு வேண்டிய வரம் தந்தருளும் ஆமென்.

  1. திரு இருதய அரசை நிறுவும் சடங்குமுறை

குரு:            ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

மக்கள்:      விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

குரு:            ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள்:      உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

செபிப்போமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் உருவத்தையோ, படத்தையோ வடிவமைத்து அவற்றை எங்கள் ஊனக் கண்களினால் பார்க்கும்போதெல்லாம், எங்கள் ஞானக் கண்களினால் அவருடைய செயல்களையும் தூய்மையையும் தியானிக்க அருளினீரே. உம் ஓரே பேறான திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயத்தை வழிபட நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் படத்தை (உருவத்தை) ஆசீர்வதித்துத் தூய்மைப்படுத்தும்படி உம்மை மன்றாடுகிறோம். இந்தப் படத்தின் (உருவத்தின்) முன் உம் திருமகனைப் பக்தியுடன் வழிபட்டு மகிமைப்படுத்தும் மக்கள் அனைவரும், இவ்வுலக வாழ்வில் அவரது அன்புப் பாதையில் நடந்து, மறுவாழ்வில் முடிவில்லா மகிமையடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்: ஆமென். 

(குரு படத்தின் சுருபத்தின் மேல் தீர்த்தம் தெளிக்கிறார்). 

2. திரு ருதயப்படத்தை (அல்லது) சுருபத்தை நிறுவுதலும்.

பின்னர், குடும்பத் தலைவரும் தலைவியும் திரு இதய உருவத்தை அதற்குரிய இடத்தில் நிறுவுவர். பின்பு, மலர்கள், மெழுகுவத்திகள் அல்லது வண்ண விளக்குகள் ஏற்றபடும், பின்னர், அனைவரும் மண்டியிட்டு தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவர்.

3  விசுவாசத்தை அறிக்கையிடுதல்

இப்பொழுது நமது விசுவாசத்தை அறிக்கையிடுவோம்

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வல பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென். 4இறைவாத்தையும் குருவின் அறிவுரையும்

4. இறைவார்த்தை

வாய்ப்புக்கேற்ப, குரு இறைவார்த்தையை வாசித்து சிறு மறையுரை அல்லது திரு இருதய பக்த்தியை குறித்து சில அறிவுரைகள் கூறிய பின்னர்பின்வரும் செபத்தை உரத்தகுரலில் வாசிக்கிறார்குரு இல்லையெனில்குடும்பத் தலைவர் தலைவி கீழ் கண்ட இறை வார்த்தை பகுதியிலிருந்து ஏதேனும் ஒன்றை வாசிக்கலாம்.  

LK 19: 1 – 9;    Ezekiel 36: 22-28;        Eph 3:14-219;                          Matthew 11:25-30;        Matthew 15:32-39                 Catechism of the Catholic Church # 2562 & 2563 

5. திரு இதயத்துக்கு தனது குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் செபம் (குடும்ப தலைவர்)

கிறிஸ்தவக் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்க உமக்குள்ள ஆவலைத் தூய மார்கரெட் மரியா வழியாகத் தெரிவித்த இயேசுவின் திரு இருதயமே! எங்கள் குடும்பத்தின் மீது உமக்குள்ள எல்லா அதிகாரத்தையும் சிறப்பாக அங்கீகரிக்கும்படி இதோ இன்று இங்கே கூடியிருக்கிறோம். இன்று முதல் உமது வாழ்வைப் பின்பற்றி நடக்க விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் சமாதானமாய் இணைந்து வாழ்வதற்குத் தேவையான புண்ணியங்கள் எங்களது குடும்பத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நீர் வென்று விலக்கியிருக்கும் உலகப் பற்றுதல்களை எல்லாம் எங்களை விட்டு அகற்றிப்போட விரும்புகிறோம். கபடற்ற எங்கள் விசுவாசத்தின் காரணத்தால் எங்கள் மத்தியில் நீர் அரசாள்வீராக. முழு இருதயத்தோடு உம்மை அன்பு செய்வதால் எங்கள் இருதயங்களின் அரசராக நீர் வீற்றிருப்பீராக. திவ்விய நற்கருணையில் உம்மை அடிக்கடி உட்கொள்வதால் எங்கள் அன்பை அதிகரித்தருளும். 

ஒ, இயேசுவின் திரு இருதயமே! எங்கள் மத்தியில் உமது ஆட்சியை நிறுவி, நாங்கள் சிறப்பாகச் செய்யும் ஆன்ம சரீர முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். எல்லா கவலைகளையும் எங்களிடமிருந்து நீக்கியருளும். எங்கள் இன்பங்களை ஆசீர்வதித்துத் துன்பங்களினின்று எங்களை மீட்டருளும். எங்களில் யாராவது உம்மை எப்போதாவது வருத்தத்துக்குள்ளாக்கியிருந்தால், திரு இருதயமே வருத்தப்படும் அந்தப் பாவியின் மீதும் நீர் இரக்கம் உள்ளவர் என்பதை நினைவு கூர்ந்தருளும். நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியும்படி எங்களுக்குள் இறப்பு நேரிடும்போது இறப்பவர்களும், உயிரோடு இருப்பவர்கள் எல்லாரும் உமது திருவுளத்திற்கு ஏற்ப நடக்க அருள் தாரும். இறுதியில் ஒருநாள் நாங்கள் எல்லாரும் விண்ணகத்தில் ஒன்றுகூடி உமது மகிமையை எக்காலமும் போற்றித் துதிக்கும் பாக்கியம் கிடைக்குமென்ற நம்பிக்கையால் ஆறுதலடைவோம். எங்களது இந்தக் காணிக்கையைத் தூய மரியாவின் மாசற்ற இருதயமும், மகிமை நிறைந்த தந்தையாகிய தூய யோசேப்பும் உம்மிடம் சமர்ப்பித்து, எங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நாங்கள் அதை மறவாதிருக்கும்படி எங்களுக்கு உதவி செய்தருளும். எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திரு இருதயம் என்றும் துதிக்கப்படுவதாக.

இறைவா! இறந்து போன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இந்த வேண்டுதல் உம் அடியார்கள் அனைவருக்கும் பயன்படுவதாக. அனைத்துப் பாவங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, உம் மீட்பில் அவர்கள் பங்குபெற அருள்வீராக! இந்த வழிபாட்டிலே பங்குகொள்ள இயலாமல் வேறு இடங்களில் இருக்கும் உறவினர், உபகாரிகள், நண்பர்களுக்காகவும் வேண்டுகிறோம். இறைவா, அவர்களை எல்லாம் உமது அன்பிலே காத்து, அருளினால் நிரப்பி வழிநடத்தியருளும். என்றென்றும் வாழ்த்து ஆட்சி செய்பவர் நீரே. ஆமென்..

ஒரு பரலோக... அருள் நிறைந்த... மற்றும் பிதாவுக்கும் (page 5).... தொடர்ந்து குடும்பத்தின் தலைவர்/தலைவி கீழ்க்காணும் வேண்டுதலை பக்தி உருக்கத்துடன் வாசிப்பார்.

6. திரு இதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்: குடும்ப தலைவி

ஆயிரக்கணக்கான மற்ற குடும்பங்களுக்குள் இக்குடும்பத்தைத் தமது உரிமையாகவும், மனுமக்களால் தமக்கு நேரிடும் சிநேகத்துக்கு நன்றி கெட்ட தனத்துக்குக் பரிகாரமான இல்லமாகவும் தெரிந்து எடுத்து கொள்ள      சித்தமான இயேசுவின் திருஇருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக. 

ஓ ஆண்டவரே! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக் கொள்ளும்படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை பற்றி எளியோர் நாங்கள் என்ன சொல்ல முடியும்?. எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது தொழுகிறோம். எங்களுக்கு நேரிடும் துன்ப துரிதங்கள், இன்ப சந்தோஷங்கள், மனக்கவலை அனைத்திலும் நீர் எங்களோடு இருப்பதை பற்றி மனமகிழிகிறோம். நீசராகிய எங்கள் குடிசைக்குள் தேவரீர் எழுந்தருளி வர நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால் உமது திருஇருதய மகிமையை எங்களுக்கும் விளக்கிக் காட்டும் உன்னத மொழிகளில் திருவாய் மலர்ந்திருக்கிறீர் ஆகையால், எங்கள் ஆத்துமம் உம்மை நாடித் தேடுகின்றது. ஈட்டியால் குத்தி திறக்பப்பட்ட உமது விலாவினின்று ஓடி வரும் சீவிய ஊற்றில் எங்கள் ஆவலைத் தீர்ப்போம். 

முடிவில்லாத வாழ்விற்கு ஊற்றும் மூலமுமாயிருக்கும் உமக்கே எங்களை முழுவதும் கையளிக்கிறோம். ஓ! இயேசுவின் திரு இருதயமே எங்களை விட்டு ஒரு போதும் பிரியாதேயும். உம்மையே நேசிக்கவும் மற்றவர்களும் உம்மை நேசிக்கும்டிபச் செய்யவும், இது முதல் உழைத்து வருவோம். உலகத்தைப் பரிசுத்தமாக்கும்படி அதைச் சுட்டெரிக்கும் தேவ அக்கினி நீரே. பெத்தானியாவில் உமக்கு இல்லிடம் கொடுத்த வீடு போல் இந்த வீடும் உமக்குப் பிரியமுள்ளதாய் இருப்பதாக! உமது திரு இருதயத்தோடு உரையாடி  கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தந்தருளும். பரிசுத்த ஆத்துமாக்கள் இந்த வீட்டிலும் காணக் கிடைப்பார்களாக. அத்தியந்த நேசமுள்ள இரட்சகரே! எகிப்து தேசத்திற்கு நீர் சிறு குழந்தையாய்ப் போனபோது உமக்குக் கிடைத்த தாழ்மையான இல்லிடம் போலாகிலும் இவ்வீடு இருக்கும்படிச் செய்தருளும்.

ஓ! இயேசுவே எழுந்தருளி வாரும். நசரேத்தூரில் உமது தருத்தாயானவள் எவ்விதமாய் நேசிக்கப்பட்டார்களோ, அவ்விதமே இங்கேயும் அவரை உருக்கமாய் நேசித்து வருகிறோம். மிகவும் பிரமாணிக்கமாயுள்ள ஆத்தும சிநேகிதரே, எங்கள் கஸ்தி துன்ப வேளையில் நீர் இங்கே இருந்திருப்பீரானால், எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆகிலும் எங்கள் இக்கட்டுக்காலம் இன்னும் முடியவில்லை ஆதலால், இப்போதே எழுந்தருளி வாரும். எங்களோடே வாசம் செய்ய கிருபை கூர்ந்தருளும். ஏனெனில் மாய உலகம் எங்களை மயக்கி, உம்மை மறந்து போகும்படி ஏவித்தூண்டுகிறது. நாங்களோ, உம்மோடு என்றென்றைக்கும், இணைந்திருக்க ஆசையாய் இருக்கிறோம். எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறீர். பூவுலகில் நீர் மனுமகனாய் வாழ்ந்த காலத்தில் உரைத்தது போல், “இன்று இந்த வீட்டில் நான் தங்கி வசிப்பேன்” என்று உமது திருவாய் மலர்ந்து எங்களுக்கும் சொல்வீராக! ஆண்டவரே இந்த வீட்டை உமது இல்லிடமாய் ஆக்கியருளும். நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, ஆராதித்து எப்போதைக்கும் உம்மோடு, உமக்குப் பிரியமுள்ளவர்களாக வாழ உதவி செய்தருளும்.

ஓ, இயேசுவே! ஜெயசீலரான ஆண்டவரே! உமது இருதயம் என்றென்றைக்கும் இவ்வீட்டில் மகிமையும், ஆராதனையும், ஸ்துதியும் பெறுவதாக. உம்முடைய இராச்சியம் வருக!  – ஆமென்.

7. இயேசுவின் திரு இதயத்துக்கு நிந்தைப் பரிகார செபம்

இச்செபத்தை குடும்பத்தில் இருந்து ஒருவர் அல்லது மற்றவர் சேர்ந்து செபிப்பர்:

எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமேநாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டுஉம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்துநீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம்எங்கள் பாவங்களையும், நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம்அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும்எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யவும் துணிகிறோம்.

ஆண்டவரேஎளியோர், உமக்கு எதிராக செய்த குற்றங்களுக்காகவும்பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த மனத்துயர் கொண்டுஅவற்றை நீர் மன்னிக்கவும்அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்உம் திரு இதயத்துக்கு செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக, எளியோரின் தொழுகை வணக்கத்- துதிகளுடன், விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும்மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும், மிகுந்த தாழ்ச்சிபணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.

எங்கள் திவ்விய இயேசுவேஎங்கள் ஒரே நம்பிக்கையேஎளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம்இறைவாஎங்கள் இதயங்களை கைவசப்படுத்திதூய்மையாக்கிபுனிதமாக்கியருளும். எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் ஆமென்.

OR

கழுவாய் வேண்டுதல் (திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இயற்றியது)

மனுக்குலத்தின்மட்டில் உமக்குள்ள அணைகடந்த அன்புக்குக் கைம்மாறாகமிகுந்த மறதியையும்அசட்டைத்தனத்தையும்நிந்தையையும் பெறுகிற இனிய இயேசுவேஉமது அன்பு இதயம் எல்லா இடங்களிலும் அனுபவிக்கிற மறதிநிந்தைகளுக்கொல்லாம் சிறப்பான தொழுகையால் கழுவாய் புரிய ஆவல் கொண்டுஉமது பீடத்தின் முன்பாக இதோநெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடக்கிறோம்.

அத்தகைய பெரிய அவமானங்களுக்குஐயையோநாங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்துஎங்கள் முழு உள்ளத்தோடு அவைகளை வெறுத்துஎங்களை மன்னிக்கும்படி உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம்எங்கள் துரோகங்களுக்காக மட்டுமல்லமீட்புப் பாதையை விட்டுத் தொலைவில் விலகிப் போய்தங்கள் பிடிவாதம் பற்றுறுதிக்குறைவை முன்னிட்டுமேய்ப்பரும் வழிகாட்டியுமான உம்மைப் பின்பற்ற மாட்டோம் என்பவர்களின் பாவங்களுக்காகவும்திருமுழுக்கு வாக்குறுதிகளை மீறிஉமது சட்டத்தின் இனிய நுகத்தடியை உதறிவிட்டவர்களின் பாவங்களுக்காகவும் மனதார கழுவாய் தேடிட தயாராயிருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்.

உமக்கு விரோதமாய்ச் செய்த அருவருப்புக்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும் கழுவாய் புரிந்திட இப்போது தீர்மானித்திருக்கிறோம்மரியாதையற்ற உடையாலும்நடத்தையாலும்கிறிஸ்துவத் தன்னடக்கத்துக்கு விரோதமாய்ச் செய்த கணக்கற்ற துரோகங்களுக்காகவும், மாசற்றவர்களை மயக்கி வலையிலிட்ட தீய செயல்களுக்காகவும்ஞாயிறு ஓய்வு நாள் கடமைகளை அடிக்கடி மீறியதற்காகவும்உமக்கும் உம் புனிதர்களுக்கும் விரோதமாகச் சொன்ன வெட்கமற்ற பழித்துரைகளுக்காகவும்கழுவாய் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். உலகில் உம் பதிலாளியான திருத்தந்தைக்கும்உம்முடைய குருக்களுக்கும் செய்யப்படும் அவமானங்களுக்காகவும்உமது அன்பின் திருவருட் சாதனத்தை மனம்பொருந்தி அலட்சியத்தால் அல்லது கனமான தேவதுரோகங்களால் பங்கப் படுத்தியதற்காகவும்இறுதியாக நீர் நிறுவிய திருச்சபையின் உரிமைகளையும் போதக அதிகாரத்தையும் எதிர்க்கிற மக்களின் பகிரங்க அக்கிரமங்களுக்காகவும் கழுவாய் செய்ய விரும்புகிறோம்.

இறைவனாகிய இயேசுவேஇத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள் இரத்தத்தினாலே தூய்மைப் படுத்த இயலும் என்றால்எவ்வளவோ பாவிகளை, உமது இறைமகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்கெல்லாம் கழுவாயாகநீர் சிலுவையில்  உம் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்து நாள்தோறும் எங்கள் பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை ஒப்புக் கொடுக்கிறோம்உம்முடைய கன்னித் தாயும்புனிதர்கள் அனைவரும்பக்தியுள்ள எல்லா பற்றுறுதியாளர்களும்செய்கிற கழுவாய் முயற்சிகளோடு ஒன்றித்துஅவற்றை ஒப்புக் கொடுக்கிறோம்

உமது அணை கடந்த அன்பை அலட்சியம் செய்ததற்காகவும்கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் செய்த பாவங்களுக்காகவும்உமது அருள்துணையால் எங்களால் இயன்ற மட்டும் கழுவாய் தேட முழுமனத்துடன் வாக்களிக்கிறோம்இனிமேலாகநாங்கள் பற்றுறுதியில் தளராமல் தூய நடத்தையுள்ளவர்களாய் வாழ்ந்துநற்செய்திக் கட்டளைகளையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் அனுசரித்து வருவோம்பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால் ஆனமட்டும் தடுப்போம்பலர் உம்மைப் பின்பற்றும்படி எங்களால் இயன்ற அளவு முயலுவோம் என வாக்களிக்கிறோம்.

அன்பு இயேசுவேகழுவாய் புரிவதற்கு எங்கள் மாதிரியாய் இருக்கிற புனித கன்னிமரியாவின் வழியாகநாங்கள் செய்யும் கழுவாய் முயற்சி எனும் முழுமனக் காணிக்கையை ஏற்றருளும்நீர் தந்தையோடும் தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் புனித வீட்டுக்கு நாங்கள் எல்லோரும் ஒரு நாள் வந்து சேரும்படிஎங்களுக்கு இறுதி வரை உமதருளில் நிலைத்திருக்கும் வரம் தந்துஎங்கள் கடமையிலும்உமக்குப் புரிய வேண்டிய பணியிலும்சாகும்வரை பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தருளும் ஆமென்.

8. இயேசுவின் திரு இதயத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் செபம்

(புனித மார்கரீத்து மரியா)

இச்செபத்தை எல்லோரும் சேர்ந்து செபிப்பர்:

இயேசு நாதருடைய திரு இருதயத்துக்கு எளியேன் என்னை முழுவதும் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன்என்னில் உள்ளதும்எனக்கு உள்ளதுமான அனைத்தும்அத்திரு இருதயத்தையே அன்பு செய்துபுகழ்ந்துவணங்கும் படியாக; என்னைஎன் உயிரைஎன் செயல்களைஎனக்கு நேரிடும் இன்ப துன்பங்களை எல்லாம்  அந்த திரு இதயத்துக்குப் பாத காணிக்கை ஆக்குகிறேன்திவ்விய இருதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன்அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழு மனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன்திரு இருதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றது எல்லாம்  செய்வேன்இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்!

இனிய திரு இருதயமேநீரே என் அன்புக்கு எல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல்என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரேநீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்துஎன் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரேஎன் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே! தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமேஉம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடிஅவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும்! அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமேஎன் பலவீனத்தை எண்ணி அஞ்சும் அதே வேளையில்உம் தயாளத்தையும் எண்ணிஎன் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.

எனவேஉமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால்அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும்நான் உம்மை ஒரு போதும் மறவாமலும்உம்மைவிட்டுப் பிரியாமலும் இருக்கஉம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும்உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணி இருப்பதால்என் பெயரை உமது திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்.

 9. இயேசுவின் திரு இதயத்துக்கு குடும்பங்களை ஒப்புக் கொடுக்கும் செபம்

(புனித மார்கரீத்து மரியா)

இச்செபத்தை குடும்பத்தில் இருந்து ஒருவர் அல்லது மற்றவர் சேர்ந்து செபிப்பர்:

இயேசுவின் திரு இருதயமேகிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல நன்மைகளையும்சொல்லமுடியாத உமது நன்மைத் தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவேஎங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்தேவரீர், எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.

தவறி எங்களில் யாராவது உமது திருஇதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம்உமது திரு இதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம்பலவீனர்களுக்கு பலமும்வயோதியர்களுக்கு ஊன்றுகோலும்விதவைகளுக்கு ஆதரவும்அனாதைப் பிள்ளைகளுக்குதஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும்ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமேசிறுபிள்ளைகளை எவ்வளவோ அன்போடு நேசித்தீரேஇந்த ஊரிலும், எங்கள் வீட்டிலும் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்அவர்களை ஆசீர்வதியும்அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும்தெய்வ பயத்தையும் வளரச்செய்யும்வாழ்நாளில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம்திவ்விய இயேசுவேமுறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் வாழ்ந்துமரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும்ஆமென்.

10. இயேசுவின் திரு இதயத்துக்கு மனுக்குலத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்

இச்செபத்தை குடும்பத்தில் இருந்து ஒருவர் அல்லது மற்றவர் சேர்ந்து செபிப்பர்

, மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவேமனுக்குலத்தின் இரட்சகரேஉமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும்நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம்இன்னும் அதிக உண்மையாய், தேவரீரோடு ஒன்றித்திருக்கத் தக்கதாக எங்களில் ஒவ்வொருவரும், எங்கள் மனதார, எங்களை இன்றைக்கு உம்முடைய திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சுவாமிமனிதர்களுக்குள்ளே பலர், தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லைவேறு பலர்  உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள்மகா தயாளம் நிறைந்த இயேசுவேஇவர்கள் எல்லார் பேரிலும் இரக்கமாயிரும்இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும்

ஆண்டவரேஉம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல்என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றிஉம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப் பிள்ளைகளுக்கும் தேவரீர் அரசராக இருப்பீராகஇவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராகஅபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும்விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் அரசராயிருப்பீராகஎங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படிஇவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும்விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும்இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும்இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமிமுற்காலத்தில், தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும்உமது திரு இரத்தம் அவர்களின் வாழ்வினுடையவும், மீட்பினுடையவும் ஊற்றாக  அவர்களுக்கு உதவக் கடவதாக.

ஆண்டவரேஉம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான தன்னுரிமையை அதற்குக் கட்டளையிட்டருளும்சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்கு முறையையும், சமாதானத்தையும் தந்தருளும்இந்த பூமியில் ஒருகோடி முனை முதல் மறுகோடி முனை மட்டும், ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாகமகிமையும், வணக்கமும், சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் இடைவிடாது ஒலிக்கக் கடவதாக. - ஆமென்.

11. இயேசுவின் திரு இதயத்துக்கு மன்றாட்டுமாலை -

இச்செபத்தை குடும்பத்தில் இருந்து ஒருவர் அல்லது மற்றவர் சேர்ந்து செபிப்பர்

 

ஆண்டவரே இரக்கமாயிரும் -               ஆண்டவரே இரக்கமாயிரும் 
கிறிஸ்துவே இரக்கமாயிரும் -              
கிறிஸ்துவே இரக்கமாயிரும் 
ஆண்டவரே இரக்கமாயிரும்        -         
ஆண்டவரே இரக்கமாயிரும் 

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் -
 
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்

விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா,- எங்கள்மேல் இரக்கமாயிரும்.
 
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, - 
எங்கள் மேல் இரக்கமாயிரும்.

என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமேஎங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
 பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
 
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
 
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
 
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, 
எங்களைத்  தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே,                  - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே
, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
 
எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 
 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். 
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 
 
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் 
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 
 
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

 முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே

துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

 

செபிப்போமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்

  

பாடல் 1: இயேசுவின் இருதயமே

 இயேசுவின் இருதயமே, எங்கும் எரிந்திடும் அருள்மயமே

உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் 

எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

 

இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு – 2

என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் 

இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு – 2

 

கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2

அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால்

எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

 

இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு – 2 

எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால் 

எந்த இரவிலும் காவலுண்டு - 2

 

பாடல் 2: எல்லாம் உமக்காக

 

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக - 2

 

1. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2

உந்தன் அதிமிக மகிமைக்கே

 

2. ஒளியை நோக்கா மலரில்லை

நீரை நோக்கா வேரில்லை - 2

உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2

வாழ்வில்லை அதில் பயனில்லை